

தூத்துக்குடி: பாலியல் வழக்கில் வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் மது போதையில் பாலியல் பலாத்கரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வம் என்ற வாலிபரை தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் பொன்ராம் ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற மாரி செல்வத்தை இடது காலில் காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த காவல்துறையினர் மற்றும் மாரி செல்வம் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.