கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை; 2271. 60 மிமீ மழை பொழிவு

78பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12.12.24 காலை 6.30 மணி முதல் 13.12.24 காலை 6.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை பொழிவு குறித்த அளவு விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் 59.50 மி.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 145.50 மி.மீ, திருச்செந்தூரில் 41.10 மி.மீ, காயல்பட்டிணத்தில் 105.00 மி.மீ, குலசேகரப்பட்டினத்தில் 17.00 மி.மீ, சாத்தான்குளத்தில் 64.60 மி.மீ, கோவில்பட்டியில் 364.70 மி.மீ, கழுகுமலையில் 168.00 மி.மீ, கயத்தாறில் 113.00 மி.மீ, கடம்பூரில் 156.00 மி.மீ, எட்டயபுரத்தில் 174.40 மி.மீ, விளாத்திகுளத்தில் 186.00 மி.மீ, காடல்குடியில் 121.00 மி.மீ, வைப்பாரில் 169.00 மி.மீ, சூரங்குடியில் 127.00 மி.மீ, ஒட்டப்பிடாரத்தில் 90.10 மி.மீ, மணியாச்சியில் 76.00 மி.மீ, வேடநத்தத்தில் 51.20 மி.மீ, கீழ அரசரடியில் 42.40 மி.மீ எனமொத்தம் 2271.60 மி.மீ மழையும், சராசரி மழை பொழிவாக 119.56 மி.மீ மழையும் பெய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி