
திருமா கோட்டையில் 3ஆம் வகுப்பு மாணவியின் நெகிழ்ச்சி செயல்
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயில்பவர் மாணவி ம. பொன்சரோணி, இம்மாணவி, தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1000 ரூபாயை பள்ளிக்கு கல்வி புரவலர் நிதியாக வழங்கியுள்ளார். இம்மாணவியின் செயல், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இம்மாணவியை கல்வி அதிகாரிகள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.