இந்தியாவில் நாளை (ஏப்ரல் 13) அதிகாலை 6 மணியளவில் வானில் 'பிங்க் மூன்’ தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. இதை MICRO MOON எனவும் குறிப்பிடுகின்றனர். வழக்கமான நிலாவின் அளவை விட சற்று சிறிதாக தோன்றும் எனப்படுகிறது. வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் இதனை ‘பிங்க் மூன்’ எனக் குறிப்பிடுகின்றனர். எனினும் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது. இதை வெறும் கண்களால் காண முடியும் என்கின்றனர்.