சீர்காழி - Sirklai

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Sep 19, 2024, 17:09 IST/மயிலாடு துறை
மயிலாடு துறை

கொடிய விஷம் கொண்ட பாம்புகள் நடமாட்டம்.. மக்கள் பீதி

Sep 19, 2024, 17:09 IST
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை மேலையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது வீட்டு வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓடுகளில் பாம்புகள் பதுங்கி இருப்பதாக சீர்காழி பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியன் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் வந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியன் ஓடுகளில் பதுங்கி இருந்த பாம்புகளை பிடிக்க ஆரம்பித்தார் இதில் ஒன்றன்பின் ஒன்றாக 7அடி நீளமுள்ள மூன்று சாரை பாம்புகள் மற்றும் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது. மூன்று சாரைப்பாம்புகள் ஒரு நல்ல பாம்பு என மொத்தம் நான்கு பாம்புகள் அடுத்தடுத்து பிடிபட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ந்து போயினர். பின்னர் பிடிபட்ட பாம்புகளை சினேக் பாண்டியன் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டார்.