அதிபயங்கர விபத்து.. காரில் இருந்த 6 மாத குழந்தை மீட்பு

73பார்த்தது
கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே நேற்று (செப்.18) அதிவேகமாக வந்த கார், சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் கவிழ்ந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காரில் இருந்த 6 மாத கைக்குழந்தை உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்