மயிலாடுதுறையில் நள்ளிரவில் திடீர் மழை

78பார்த்தது
மயிலாடுதுறை நகரில் நேற்று நள்ளிரவு பல்வேறு பகுதிகளில் சிறிது நேரம் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கு மிகவும் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த திடீர் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் மழை இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி