முருகன் கோவிலில் 1 கோடியே 24 லட்சம் உண்டியல் காணிக்கை

79பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்வதுண்டு.   மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி உள்ளனர். பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம் எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் கடந்த 28 நாட்களில் மட்டும்  உண்டியல் காணிக்கை மூலம் ரூ 1கோடியே 24 லட்சத்து 15 ஆயிரம் 185 ரூபாயும்,   தங்கம் 403 கிராமும், வெள்ளி 8 கிலோ 345 கிராமும் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி