கேரள மாநிலம் வெஞ்சாரமூடு பகுதியில் தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துவிட்டு எலிமருந்தை உட்கொண்டு விட்டதாக கூறிய அஃபானின் உடல்நிலை குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் உடல்நிலை மோசமாக இல்லை என்றும், அந்த நபர் தற்போது மார்பு வலி பிரிவிற்கு (Chest Pain Unit) மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். எலி மருந்து சாப்பிட்டதால் அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.