
திருவள்ளூர்: சிறையில் கஞ்சா, பீடிகள் பறிமுதல்; போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே புழல் விசாரணை சிறையில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மற்றும் செல்போன்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று (ஏப்ரல் 8) சிறையில் உள்ள செங்குன்றம் பகுதி சேர்ந்த தீபக் 27 இவர் செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தீபக்கை சென்னை விரைவு நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக அழைத்து சென்று சிறைக்கு அழைத்து வந்த போது அப்போது சோதனை செய்தபோது ஆசனவாய் பகுதியில் 10 கிராம் கஞ்சா ஆறு பீடி இருந்தது தெரியவந்தது. சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா மற்றும் பீடி நீதிமன்றத்தில் யாராவது கொடுத்தார்களா அல்லது உணவு அருந்திய போது யாராவது கொடுத்தார்களா இதற்கு பாதுகாப்பில் சென்ற போலீசாரே உடந்தையாக இருந்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.