

திருவள்ளூர்: மின் மோட்டார் வயர்கள் திருடு.. குடிநீர் வழங்குவதில் சிரமம்
திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் கூனிபாளையம், பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோட்டை குளம், பகுதியில் குடிநீர் வழங்கும் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது இந்த குடிநீர் மின் மோட்டார் மூலமாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் மின்மோட்டாரில் பொருத்தப்பட்டு இருந்த 200 மீட்டர் வயர்களை மூன்றாவது முறையாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மோட்டார் ஆப்பரேட்டர் சௌந்தர்ராஜ் தெரிவிக்கையில், இன்று காலை வழக்கம்போல் மோட்டர் விடுவதற்காக வந்த போது மோட்டரில் பொருத்தப்பட்ட மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மர்ம நபர்களால் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாவும், இதேபோல் ஏற்கனவே இரண்டு முறை மோட்டாரில் பொருத்தப்பட்ட வயர் திருடப்பட்டு உள்ளதாகவும், இப்பொழுது மூன்றாவது முறையாக மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள 200 மீட்டர் மின் கம்பி வயர் திருடப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து பெண்ணாலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டுவதால் இதுபோன்று தொடர் திருட்டு அரங்கேறி வருவதாக தெரிவித்துள்ளார்.