சோழவந்தான் - Cholavanthaan

மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

மதுரை: அலங்காநல்லூரில் இன்று (செப்.,21) இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்டம் மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய திமுக சார்பாக - கலைஞர் நூற்றாண்டு நினைவு நாள் மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் கென்னடி (எ) கண்ணன் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை இன்று (செப்.,21) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். உடன் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக முக்கிய நிர்வாகிகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా