வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

73பார்த்தது
மதுரை மாவட்டம்,
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், தனி நபருக்கு ஆதரவாக சாலை
யோரத்தில் உள்ள குடியிருப்
புகளைஅகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை துறையினரைக் கண்டித்து , இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில்
கருப்பு கொடி கட்டி பொது
மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்
பள்ளம் ஊராட்சியில், சங்கையா கோவில்
முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள குடியி
ருப்புகளை ஆக்கிரமிப்பு எனக்
கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்
நீதிமன்ற மதுரை கிளையில் தனி
நபர் வழக்கு கொடுத்திருந்த நிலையில், விசாரணை முடிவில் உயர்
நீதிமன்ற
மதுரை கிளை நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்
துறையினர் மூலம் சாலையின் இருபுறமும் உள்ள
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
என, உத்தர
விட்டிருந்தது
இந்த நிலையில், இந்த பகுதியில் குடியிருக்கும் சுமார் 128 நபர்களுக்கு 15 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும், இல்லை
யென்றால்,
அரசே காலி செய்யும் நடவடிக்கை மேற்
கொள்ளும் என நோட்டீஸ் கொடுத்
திருந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த
100க்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இன்று 20க்கும் மேற்பட்டோர்
தங்கள் வீடுகளில்
கருப்பு கொடி கட்டி
தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி