வியாபாரிகள் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

55பார்த்தது
மதுரை, சோழவந்தான் வர்த்தகர் நலச்சங்கம் உணவுத்துறை, சுகாதாரத்
துறை, பேரூராட்சி ஆகியோர் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. ராஜ்குமார், ஜெயக்
குமார் ஆகியோர் அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்
கூடாது, உணவுத்
துறை சம்பந்தமாக லைசன்ஸ் எடுக்
காதவர்கள் எடுக்க வேண்டும், லைசென்ஸ் எடுத்து காலா
வதியானவர்கள் புதுப்பிக்க வேண்டும் என்று பேசினார்கள்.

சுகாதாரத்
துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில்: கோவில், பள்ளிக்கூடம் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பலகை வைக்க வேண்டும்,
அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்யக்
கூடாது.


பேரூராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் சூரியகுமார் பேசுகையில்: பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய
வீட்டு வரி, தொழில் வரி ஆகியவை குறித்த காலத்தில் கட்டினால் 5% போனஸ் வழங்
கப்படுகிறது. போக்கு
வரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும்.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதையும் மற்றும் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், முத்தையா, ரவி,
மணிகண்டன், உட்பட வியாபாரிகள் ஆகியோர் தங்களின் சந்தேகங்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.

தொடர்புடைய செய்தி