பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

62பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்காததாலும் சில மாதங்களாக பஸ் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுவதாலும் இங்குள்ள கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொற்செல்வி கூடுதல் ஆணையர் லட்சுமி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சைமணி மேற்பார்வையாளர் சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகளுக்கும் கிராம பொதுமக்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொற்செல்வி அவர்கள் உங்களுக்கு குடிநீர் இடைவிடாமல் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். அதுவரை லாரி மூலம்குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால், அங்குள்ள கிராம மக்கள் அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட கிராம பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி