மதுரையில் கண்கவரும் மீன் கண்காட்சி.

82பார்த்தது
மதுரை அருகே ரிங் ரோடு பகுதியில் இன்று மத்திய மீன்வளத்துறை சார்பில் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

மத்திய மீன்வளத் துறை சார்பில், மீனவர்களுடனான கோடைக்கால சந்திப்பு (மாநாடு), கண்காட்சி மதுரை ஐடாஸ் வர்த்தக மையத்தில் இன்று- வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற்றது.

இதில் மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சர்கள் எஸ். பி. பாகெல், ஜார்ஜ் குரியன், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மீன் வளர்ப்புத் துறையில் ஈடுபடுவோர், மீன்வள ஆராய்ச்சியாளர்கள், தொழில் துறை நிபுணர்கள், தொழில்முனைவோர் மீன் வளர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கான கருத்துக்கள், அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் மீன்கள் குறித்த கண்காட்சி, மீனவர்களுடனான உரையாடல், பயனாளிகளுக்கு வேளாண் கடன் வழங்கும் நிகழ்வு ஆகியன நடைபெற்றன.

மீன் கண்காட்சி கண்கவரும் வகையில் அமைந்திருந்தது.

தொடர்புடைய செய்தி