சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது

74பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நல்லயநாயக்கர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் உத்தரராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த ரேகா (36). என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி