
போடி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி
போடி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக உயிரிழப்பு போலீசார் விசாரணை. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்தி பிரதான சாலையைச் சோ்ந்த ராமா் மனைவி போதுமணி (54). கூலித் தொழிலாளி. இவா் போடி மீனாட்சிபுரத்தில் ஜெயராஜ் என்பவரது வயலுக்கு கூலி வேலைக்குச் சென்றாா். இந்த வயலில் மின் கம்பத்தில் இருந்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதை கவனிக்காத போதுமணி வயலில் நடந்து சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.