போடிநாயக்கனூரில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொன்விழா ஆண்டு நுழைவாயில், மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி கலைஞரால் துவங்கப்பட்ட, இந்த கல்லூரி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அன்று 50 ஆம் ஆண்டு பொன்விழா காண்பது மகிழ்ச்சி என்றார்.
அண்ணா பெரியார் கலைஞர் இந்த ஆட்சியானது சுகாதாரம் மற்றும் கல்விக்காக மட்டுமே அதன் வழியில் அன்றைய காலகட்டத்தில் படித்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்
நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, தங்கதமிழ்செல்வன் எம். பி. மற்றும் எம். எல். ஏக்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவ - மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.