தஞ்சாவூர் - Thanjavur City

ஆசிரியர் கோரிக்கைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும் - அமைச்சர்

ஆசிரியர் கோரிக்கைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும் - அமைச்சர்

தஞ்சை மைதானத்தில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்: ஆசிரியர்களின் 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் குறித்து பரிசீலனையில் உள்ளதாக அவர்களிடம் எழுதி கொடுத்துள்ளோம். ஆசிரியர்கள் தங்களுடைய உரிமைகளை கேட்கின்றனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் மூலமாக கண்டிப்பாக நல்ல முடிவு கிடைக்கும். மகாவிஷ்ணு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதை அவர்கள் பார்த்துக் கொள்வர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு கருத்துக்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தி வருகிறார். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சை நீலமேகம், மேயர் சண். ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా