சிங்காநல்லூர் - Singanallur

வன்முறையைத் தூண்டும் பிஜேபி தலைவர்கள்மீது புகார்!

வன்முறையைத் தூண்டும் பிஜேபி தலைவர்கள்மீது புகார்!

கோவையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்திய தேர்தல் நடைமுறை குறித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த தர்விந்தர் சிங் மர்வா, சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் கெய்க்வாட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த எச். ராஜா ஆகியோர் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்திலும் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை காங்கிரஸ் கட்சியினர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా