இரு பெண்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றம்

82பார்த்தது
இரு பெண்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றம்
வட கொரிய நாட்டில் சோங்ஜின் பகுதியில் ரி (39) மற்றும் காங் (43) என்ற இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ரேடியோ ஃபிரீ ஆசியா வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி செல்ல வைக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட ரி மற்றும் காங் ஆகிய இருவரையும் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி பொது வெளியில் உள்ள சந்தையில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், தூக்கிலிட்டதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி