சிங்காநல்லூர் - Singanallur

துக்க வீட்டுக்கு சென்ற மனைவி; தூக்கில் தொங்கிய கணவன்

துக்க வீட்டுக்கு சென்ற மனைவி; தூக்கில் தொங்கிய கணவன்

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் கம்பன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 44). பிளம்பர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி மாரியம்மாளின் தங்கையின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் கடந்த 6ம் தேதி மாரியம்மாள் தனது மகனை அழைத்து கொண்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சொந்த ஊரான தென்காசிக்கு சென்றார். அவர்களிடம் முத்துக்குமார் 2 நாட்கள் கழித்து நான் அங்கு வந்து உங்களை கோவை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் 4 நாட்கள் ஆகியும் முத்துக்குமார் அவர்களை அழைக்க செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாரியம்மாள் தனது கணவரை செல்போனில் அழைக்க முயன்றார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மாரியம்மாள் நேற்று முன்தினம்(செப்.11) கோவையில் வசிக்கும் தனது உறவினரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார். அவர் சென்று பார்க்கும்போது, வீட்டில் முத்துக்குமார் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தென்காசியில் உள்ள மாரியம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்