கிணத்துக்கடவு - Kinathukadavu

சபரிபாளையம் - புளியகுளம் சாலையில் விபத்து

கோவை சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் நேற்று (அக்டோபர் 12) நடந்த கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிவேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி ஒன்று கார் மற்றும் இரு பாதசாரிகள் மீது மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்தது. புளியகுளம் பகுதியைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் தனது நண்பருடன் சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி ஒன்று முதலில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. பின்னர் அதே லாரி சாலையோரம் நடந்து வந்த மருதாசலம் மற்றும் அவரது நண்பர் மீதும் மோதியது. இந்த மோதல் காரணமாக கார் மீது தூக்கி வீசப்பட்ட மருதாசலம், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய செப்டிக் டேங்க் லாரியின் ஓட்டுநரான பிரவீன் என்ற இளைஞரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా