மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் அசுக்காடு ஊராட்சியில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மரக்கிளையில் உரசி செல்கின்றன.
இதனால் மின் கம்பிகள் அருந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.