திருப்பரங்குன்றம் - Thiruparankundram

குழந்தை இல்லாத ஏக்கம்; பெண் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கம்; பெண் தற்கொலை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்குளம் சக்தி நகரை சேர்ந்த ராம்குமாரின் மனைவி ராமலெட்சுமி (30) என்பவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தை இறந்து பிறந்தது. குழந்தை இறந்து பிறந்ததால் ராமலட்சுமி மனம் உடைந்து காணப்ப ட்டார். இந்நிலையில், நேற்று (அக்.,3) வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் ராம்குமார் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా