திருப்பரங்குன்றம்: தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா

84பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமான் நேற்று(செப்.23) இரவு தங்க மயில் வாகனத்தில் வீதியுலா சென்றார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் நாளன்று மாலையில் சிறப்பு அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் நேற்று(செப்.23) கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று இரவு முருகன் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தின் காட்சியளித்து அருள்பாலித்தார். அதன் பின்பு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி