விநாயகரை தரிசனம் செய்த வேலூர் இப்ராஹிம்.

55பார்த்தது
மதுரை வில்லாபுரம் விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு விநாயகரை வணங்கினார்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள், பூஜைகள், ஆராதனைகள், , நடைபெற்றது. அதனடிப்படையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளில்
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

எப்போதும் பகையோடு இருக்கக் கூடியவரிடத்தில் நாங்கள் நேசம் பாராட்ட தயாராக இல்லை. எங்கள் எல்லையையும், மக்களையும் பயங்கரவாத பக்கம் இழுத்துச் செல்லக் கூடியவர்களை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். ஆட்சியை விட தேசம் முக்கியம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பாவ புண்ணியத்தை பேசக்கூடிய மண் இது. இது ஆன்மீக மண். இந்த ஆன்மீக பூமியை சிதைப்பதற்கு திகாகவும், திமுகவும் மகாவிஷ்ணு போன்றவர்களை தவறாக சித்தரித்தால் பாஜக குரல் கொடுக்கும் என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி