பிரபல ஜல்லிக்கட்டு காளை மறைவு.

56பார்த்தது
மதுரை அருகே சோளங்குருணி கிராமத்தில் பிரபல ஜல்லிக்கட்டு காளை நேற்று மறைவு. கிராம மக்கள் கரகாட்டத்துடன் ஊர்வமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் ராஜாங்கம் , கிரி ஆகிய இருவரும் பிரபல மாடுபிடி வீரர்கள் இவர்கள் தங்களுக்கு சொந்தமாக காங்கேயம் காளையை வளர்த்து வந்தனர்.

அவனியாபுரம் , அலங்காநல்லூர், பாலமேடு , சிராவயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், விராலிமலை என பல்வேறு ஊர்களில் 80க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளது.

தற்போது வயது முப்பின் காரணமாக நேற்று (அக். 3) இறந்து விட்டது. இதனைத் தொடர்ந்து காளை இறந்ததை கேள்விப்பட்ட சோழங்குருணி மற்றும் சுற்றியுள்ள வளையங்குளம், காஞ்சாங்குளம், நல்லூர் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கிராம பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், நாதஸ்வரம், முழங்க டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்டு முருகனுக்கு சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி