வீட்டு வாசலில் பாட்டில்களை உடைத்தவர் கைது

61பார்த்தது
வீட்டு வாசலில் பாட்டில்களை உடைத்தவர் கைது
மதுரை அருகே வீட்டின் முன்பு பாட்டில்களை உடைத்தவர் போலீசார் கைது செய்யப்பட்டார்.

மதுரை விரகனூரை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி மல்லிகா (57). நேற்று (அக்.,1) இவர் வீட்டில் தனியாக இருந்த போது இவர் வீட்டின் முன்பு மது பாட்டில்களை உடைக்கும் சத்தம் கேட்ட நிலையில் அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த ராஜாமணியின் மகன் சிவக்குமார் பாட்டில்களை உடைத்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிலைமான் போலீசார் இன்று (அக். 2) அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி