கண்ணில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம்

72பார்த்தது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடி காரணமாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி கருப்பு பட்டை அணிந்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் ஆசிரியர் பணிக்கு இடையூறில்லாமல், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வேலை நேரத்திற்கு முன்பும், வேலை நேரத்திற்கு பிறகு மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர் போராட்டமாக தினந்தோறும் நடைபெறும் என்றும் முடிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் இரவு முழுக்க உள்ளிருப்பு போராட்டம் செய்வது என்றும் தீர்மானம் செய்துள்ளனர்.

அகிம்சை வழியில் அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சம்பள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையிலும் போராட்டம் தொடர்ந்து இன்று (செப்.,24) 18 வது நாளாக நடைபெ நடைபெற்று வருகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டு மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை கோரியும், 2 ஆண்டுகளாக தொடரும் சம்பள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பல்கலை அதிகாரிகளையும் தமிழக அரசையும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.