ஓசூர் - Hosur

டூவீலர் மீது லாரி மோதி மளிகை கடைக்காரர் உயிரிழப்பு

டூவீலர் மீது லாரி மோதி மளிகை கடைக்காரர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள சின்னார் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (46). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று(செப்-21 ) கடைக்கு பொருட்களை வாங்குவதற்காக தனது டூவீலரில் ஓசூருக்கு சென்ற போது பேரண்டபள்ளி அருகே அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி ராமமூர்த்தி மீது மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் அட்கோ போலீசார் ராமமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
Sep 22, 2024, 13:09 IST/பர்கூர்
பர்கூர்

போச்சம்பள்ளி: புரட்டாசி மாதம் எதிரோலியால் காய்கறிகள் விற்பனை அமோகம்

Sep 22, 2024, 13:09 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் இன்று செப்-22- தேதி காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் பிறந்ததால் பெரும்பாலானவர்கள் அசைவ உணவை தவிர்த்து, இம்மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவார்கள். கடந்த 17-ம் தேதி நாள் முதல் தொடங்கியதால் பொதுமக்கள் அசைவ உணவுக்கு மாற்றாக காய்கறிகள், காளான், பன்னீர், உள்ளிட்ட சைவ உணவை சமைக்க துவங்கியுள்ளனர். போச்சம்பள்ளி சந்தையில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் இயற்கையாக விளைவிக்கபடும் காய்கறிகளை விவசாயிகள், விற்பனைக்கு கொண்டு வந்ததிருந்தனர். சற்று விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் காய்கறி வியபாரம் அமோகமாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.