ஓசூர் - Hosur

தளி அருகே விசைத்தறி தொழிலாளி திடீர் உயிரிழப்பு

தளி அருகே விசைத்தறி தொழிலாளி திடீர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா சூமேனஅள்ளி பகுதியில் வசிக்கும் திம்மைய்யா மகன் பாஸ்கர் (40) இவருக்கு வனிதா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி கடந்த 1அரை ஆண்டுகளாக பிரிந்துள்ளனர். பாஸ்கர் தளி அருகே உள்ள தம்மாபுரம் பகுதியில் உள்ள தறி குடோனில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்-17-ஆம் தேதி அன்று மதியம் பாஸ்கர் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். உடன் இருந்த அஸ்வத் நாராயணப்பாவிடம் தெரிவித்துள்ளார். அவர் டாக்டரை அழைத்து வருவதாக சென்றவர் டாக்டர் இல்லாததால் மீண்டும் வந்து பார்த்த போது பாஸ்கர் வாயில் மூக்கில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி