குளச்சல் - Kulachal

இரணியல்: கடன் செலுத்த முடியாத பெண் தூக்கிட்டு தற்கொலை

இரணியல்: கடன் செலுத்த முடியாத பெண் தூக்கிட்டு தற்கொலை

இரணியல் அருகே உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி வேணி (47). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வேணி முறுக்கு சுற்றும் தொழில் செய்து வந்தார். இதற்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி இருந்தார். அதனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.  இதனால் வேணி மனவருத்தத்தில் இருந்தார். நேற்று (மார்ச் 25)  காலை நாகராஜன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். வேணி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் இரவு வீட்டிற்கு நாகராஜன் வந்தபோது வீட்டின் உத்திரத்தில் சேலையில் வேணி தூக்கிலிட்டுப் பிணமாகத் தொங்குவதைக் கண்டார்.  இதுகுறித்து அவர் இரணியல் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தைக் கைப்பற்றினார்.  அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், சுயஉதவிக் குழுவில் வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியாத காரணத்தால் தற்கொலை செய்ததாக வேணி எழுதி வைத்திருந்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా