குளச்சல் - Kulachal

அஞ்சுகிராமம்: இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது

அஞ்சுகிராமம்: இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது

அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதி விளையை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி அனுசியா (30). இவரது கணவருக்கு கடந்த நான்கு வருடம் முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சமுத்திரக்கனி என்பவர் நடத்தி வரும் காளி கோயிலில் அனுசியா சிறிது காலம் கணவருடன்  தங்கி இருந்துள்ளார். அப்போது சமுத்திரகனிக்கும் அனுசியாவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த பழக்கத்தால் கோயிலை அபிவிருத்தி செய்ய அனுசியா விட மிருந்து ரூ 4 லட்சம் வரை சமுத்திரகனி வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அதன் பின்னரும் மீண்டும் பணம் கேட்டதாக தெரிகிறது. பணம் கொடுக்க மறுத்ததால் அனுசியாவை சமுத்திரகனி அவதூறாக பேசி வந்ததாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்.,11) அனுசியா தன்னை அவதூறாக பேசிய சமுத்திரக்கனியை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமுத்திரக்கனி, சரவணன், செல்வ கார்த்திக் (32) ஆகியோர்  அனுசியாவின் தலையில் வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அனுசியா கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற ரெண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా