தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்

83பார்த்தது
தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்
குமரி மாவட்டத்தில் திருவட்டாறு, கல்குளம் தாலுகாக்கள், விளவங்கோடு, தோவாளை போன்ற  பகுதிகளில் ரப்பர் விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. ரப்பர் பால் சேகரிக்கும் குவளைகளில் ரப்பர் பாலுக்கு பதிலாக மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் ரப்பர் உற்பத்தி செய்ய முடியாமல் பல ஆயிரம்  ஏக்கர் நிலப்பரப்பில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் அடியோடு முடங்கியுள்ளது.  

இன்று (அக்.,4) தொடர் மழை காரணமாக ரப்பர் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வரும் நாட்களிலும் பருவமழை தீவிரமடைய தொடங்கினால் ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி