இளம் பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வைரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்,(வயது 24); இவரது மனைவி மைதிலி, ,(வயது 20); அதே பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் மகள் ஷீலா, ,(வயது 19); இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோத உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம்(செப்.22 ) மாலை தனது கணவருடன் ஷீலா வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் ஷீலா படுகாயமடைந்தார். இதுகுறித்து ஷீலா நேற்று அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை ரஞ்சித், மைதிலி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.