சங்கராபுரம் - Sankarapuram

சங்கராபுரத்தில் 7 பைக் திருட்டு; பலே வாலிபர்கள் இருவர் கைது

சங்கராபுரத்தில் 7 பைக் திருட்டு; பலே வாலிபர்கள் இருவர் கைது

சங்கராபுரம் அருகே பைக் திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரு. 5 லட்சம் மதிப்புள்ள 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பைக் அதிகளவில் திருடு போனது. அதனைத் தொடர்ந்து, எஸ். பி. , ரஜத்சதுர்வேதி உத்திரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று (அக் 7) எஸ். குளத்துார் பிரிவு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் பாண்டியன், 21; சேகர் மகன் சூர்யா (எ) நாராயணன், 24; என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக் திருட்டு பைக் என்பதும், சங்கராபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடி வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் ஓட்டி வந்த பைக் மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 பைக் என மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி