உளுந்தூர்பேட்டை சுற்றுலா வேன் விபத்து ஆறு பேர் உயிரிழப்பு

62பார்த்தது
ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புகையில் இன்று (செப்.,25) அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலே பெண் இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்து குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி