சங்கராபுரம் - Sankarapuram

கள்ளக்குறிச்சி: மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

கள்ளக்குறிச்சி: மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

கள்ளக்குறிச்சியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி இன்று துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில், பசுங்காயமங்கலம் சாலையில் உள்ள 'ஐ ஷட்டில் ஸ்டுடியோ' மைதானத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி இன்று (2ம் தேதி) துவங்குகிறது.  ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கான இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்கள் பங்கேற்று விளையாடுவார்கள். போட்டியை கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைக்கிறார். இன்று முதல் 5ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இறுதியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப்பந்து சங்க நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
Jan 03, 2025, 04:01 IST/சங்கராபுரம்
சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி: பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

Jan 03, 2025, 04:01 IST
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பம்புதோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மனைவி மீனா, 55; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு குடும்பத்துடன் வீட்டில் துாங்கியுள்ளார். நள்ளிரவு 1. 45 மணியளவில் கதவு திறப்பது போல் சத்தம் கேட்டதால், மீனா எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது லேசாக கதவு திறந்து இருந்ததால், அதனை மூடச் சென்றபோது வெளியே இருந்த மர்ம ஆசாமி, மீனாவின் கழுத்திலிருந்த தாலி செயினை பறித்துள்ளார். உடன் மீனா செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து அவரது கணவர் ஜெகதீசன் எழுந்து வருவதற்குள், மீனாவின் கழுந்திலிருந்து தாலி செயின் பாதி அறுந்து, 17 கிராம் நகையினை பறித்து சென்றுள்ளார். மேலும், வீட்டின் பின்பக்கத்தில் இருந்து இருவர் உட்பட 3 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகள் மூன்று பேரை தேடி வருகின்றனர்.