சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க வைரமுத்து அறிவுரை
நாளை மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளர்களுக்கு பாடலாசிரியர் வைரமுத்து அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேற சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம் என பதிவிட்டுள்ளார்.