இராசபாளையம் - Rajapalayam

இராஜபாளையம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. கஞ்சா பறிமுதல். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் அழகு காவேரி கண்ணன் என்பவர் கைது. 20 கிராம் கஞ்சா பறிமுதல். இராஜபாளையம் அடுத்த M. R. நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. தகவலின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கெளதம் விஜய் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் சக்கராஜா கோட்டை தெருவை சேர்ந்த அழகு காவேரி கண்ணன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்