இராசபாளையம் - Rajapalayam

பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்; சீமான்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு செய்வதற்காக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 36 லட்சம் பேரில் புதிய வாக்காளர்கள், மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர், சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சி ஆகியவை நல்ல அரசியலை முன்னெடுக்க தடையாக உள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்தவர்களுக்கு மட்டும் சின்னம் ஒதுக்கப்பட்டது. பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு ஐயமில்லை. மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைப்பதை வரவேற்கிறேன். ஆனால் பாஜக மதவாத கட்சி, பாமக ஜாதி கட்சி என்கிற திருமாவளவன், மதவாத கட்சி திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்." இவ்வாறு சீமான் பேசினார். இந்தப் பேட்டியின்போது நதக நிர்வாகிகள் ,தொண்டர்கள் உடனிருந்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 14, 2024, 00:09 IST/சிவகாசி
சிவகாசி

பட்டாசு தொழிலை வஞ்சிக்கும் பாஜக அரசு; எம்.பி குற்றசாட்டு

Sep 14, 2024, 00:09 IST
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று (செப்.,13) எம்.பி மாணிக்கதாகூர் தலைமையில் நடைப்பெற்றன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கதாகூர், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் பட்டாசு தொழில் நஷ்டமடையாமல் பட்டாசு விற்பனைக்கும். பட்டாசு வெடிப்பதற்கும் அனைத்து மாநில அரசுகளும் அனுமதி வழங்க வேண்டும். பட்டாசு தொழில் என்றாலும், ஒன்றிய அரசு விருதுநகர் மாவட்டத்தை வஞ்சிக்கிறது. நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக பட்டாசு தொழிலுக்கான தனிச்சட்டம் இயற்றப்படுமென எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்வரைவு வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலையும், தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்கும் விதமாக புதிய தனிச்சட்டம் இருக்க வேண்டும். பட்டாசு தொழிலை அழிக்கும் விதமாக புதிய சட்டம் இருக்கக் கூடாது. பட்டாசு தொழிற்சாலை பிரச்சனை குறித்து நாக்பூரிலுள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லாமல், சிவகாசியிலுள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தின் மூலமாகவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம் என்றார்.