இராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் அருகே பாறைக் கோவில் தெரு முன்பாக 29 வயது வாலிபர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த (29) வயதுடைய வாலிபர் சாதம் உசேன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.420/- கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.