இராசபாளையம் - Rajapalayam

இராஜபாளையம்: சட்டவிரோதமாக செயல்படும் பார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - தென்காசி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள கிராம பகுதிதான் சேத்தூர். இப்பகுதியில் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு மேல்புறம் கடை எண் 12112 என்கிற எண் கொண்ட அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. மக்கள் நடமாட்ட மிகுந்த பகுதியில் இந்த மதுபான கடை திறக்கப்பட்ட நாளிலிருந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பல்வேறு கட்சியினர் மதுக்கடை அகற்றக் கோரி பல முறை போராட்டம் நடத்தி வரும் நிலையில் மது கடையில் பார் டெண்டர் எடுத்த முத்துக்குமார் என்பவர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் GPay வசதிகளுடன் தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. மதுக்கடையை மாற்றி அமைக்கவும் 24 மணி நேரமும் திரை மறைவுக்குப் பின்னால் அமர்ந்து மது விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்க்கும், மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


விருதுநகர்