இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த 56வயது முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் அடுத்த சொக்கநாதன்புத்துார் அருகே. உள்ள அரிசி அரைக்கும் ரைஸ் மில் முன்பாக முதியவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக சேத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் கோட்டியப்பசாமி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 56வயதுடைய முதியவர் சிவகாமிநாதன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 360/- கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.