விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் அடுத்த சொக்கநாதன்புத்தூர் அருகே உள்ள அரிசி அரைக்கும் ரைஸ் மில் முன்பாக முதியவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக சேத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் கோட்டியப்பசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய முதியவர் சிவகாமிநாதன் என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.360/- கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.