அருப்புக்கோட்டை - Aruppukkottai

அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் காயம்

பந்தல்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியைச் சார்ந்தவர் பாண்டி. இவர் தனது நண்பர் முத்துராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பந்தல்குடி பகுதியில் சாலையை கடக்க முயற்சி செய்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாண்டி மற்றும் முத்துராஜா ஆகிய இருவருமே காயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாண்டியளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்