சோழிங்கர் - Sozhingar

காவேரிப்பாக்கத்தில் கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது

காவேரிப்பாக்கத்தில் கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது

காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாணியசத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அரக்கோணம் துணை எஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் காவேரிப் பாக்கம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் நேற்று(செப்.14) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலாஜா சுங்கச்சாவடி அடுத்த வாணியசத்திரம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்துக்குரிய 3 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேரும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருமலைச்சேரி பகுதியைச் சேர்ந்த வேலு (வயது 49), ராமாபுரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (38), தமிழ்செல்வன் (20) என்பதும், இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைந்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా