பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 3 பேர் பரிதாப பலி

79பார்த்தது
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 3 பேர் பரிதாப பலி
உத்திரப் பிரதேச மாநிலம் சித்தார்த்தநகர் மாவட்டம் அருகே உள்ள சர்காவா பாலத்தில் நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில், 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி