திருப்பத்தூர் அடுத்த ஜமணப்புதூர் பகுதியில் எழுதுவிடும் திருவிழா ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த எழுதுவிடும் திருவிழாவில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடியது.
மேலும் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக 100001 ரூபாயும், இரண்டாவது பரிசாக 75001 ரூபாயும், மூன்றாவது பரிசாக 50001 ரூபாய் என மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த எழுதுவிடும் திருவிழாவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எழுதுவிடும் திருவிழாவை கண்டு களித்தனர். மேலும் இந்த எழுதுவிடும் திருவிழாவில் இரண்டு டிஎஸ்பிகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.